தில்லி சட்டப்பேரவை வளாகத்தின் நுழைவு வாயில் கதவுகளை உடைத்து அத்துமீறி உள்ளே சென்ற காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லி சட்டப்பேரவை வளாகத்துக்கு இன்று பிற்பகல் 2 மணியளவில் உத்தரப் பிரதேசம் பதிவெண் கொண்ட வெள்ளை நிற கார் ஒன்று வந்துள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்தும் நுழைவு வாயில் 2-ன் கதவை உடைத்து, சட்டப்பேரவைக்குள் கார் நுழைந்துள்ளது. பேரவைத் தலைவர் விஜேந்தர் குப்தா கார் அருகே பூங்கொத்தை வைத்துவிட்டு, மீண்டும் அதே வாயில் வழியாக வேகமாக வெளியேறிய அந்த கார் அங்கிருந்து மாயமாகிவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் குற்றப்பிரிவு அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். எனினும், இதுவரை சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை.
தற்போது மத்திய ஆயுதப் படைக் காவலர்களின் காண்காணிப்பின் கீழ் தில்லி சட்டப்பேரவை வளாகம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் காரின் உரிமையாளரைக் காவல்துறையினர் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தில்லி சட்டப்பேரவை வளாகத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புக் குறைபாடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Car Trespasses into Delhi Assembly Complex! Driver Flees After Leaving Behind a Bouquet!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

பராமரிப்புப் பணி: பழநியில் மே 22-இல் ரோப் கார் சேவை நிறுத்தம்!

ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ் தரும் புதிய கார்! அறிமுகம் செய்கிறது மாருதி!

செங்கிப்பட்டி அருகே திடீரென பற்றி எரிந்த கார்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



