ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருகிறேன்: பிரதமர்

பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :11 டிசம்பர் 2022, 5:58 am

DIN

பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாரதியாரின் 141வது பிறந்த தினம் இன்று (டிசம்பர் 11) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், பாரதியாரின் எண்ணங்களை செயல்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும், இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தில் நான் அவருக்கு தலைவணங்குகிறேன். அவர் மிகுந்த தைரியமும், புத்திக் கூர்மையும் உடையவர். இந்தியாவினுடைய வளர்ச்சி குறித்து அவருக்கு மிகப் பெரிய தொலைநோக்குப் பார்வை இருந்துள்ளது. நாங்கள் அவரது அந்த தொலைநோக்குப் பார்வையை அனைத்துத் துறைகளிலும் செயல்படுத்த உழைத்து வருகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.