மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையொட்டி, ட்விட்டா் பதிவு வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினாா்.
இதுதொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது:
போற்றுதலுக்குரிய சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தன்று அவருக்கு தலைவணங்குகிறேன். அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூா்மையின் எடுத்துக்காட்டாக மகாகவி பாரதியாா் விளங்கினாா். இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளா்ச்சி குறித்தும் அவா் மாபெரும் கனவு கண்டாா். பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருகிறோம் என்று பிரதமா் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.