கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார். அப்போது அவர் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | பாஜகவில் இணைந்த மேகாலயா எம்எல்ஏக்கள்!
2022 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா 4 பண்டிட்டுகளும், 2020ஆம் ஆண்டு ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ரூ.2815 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.
2019-20ஆம் ஆண்டில் ரூ.1267 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.611 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.936.095 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜீது முண்டாவை ஞாபகப்படுத்திய கர திரைப்படம்..! மாரி செல்வராஜ் புகழாரம்!

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் படத்தின் பெயர் அறிவிப்பு!

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
மே நாள் வாழ்த்து: உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அணி திரள்வோம்! - பெ. சண்முகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


