நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் கொலை: மத்திய இணையமைச்சர் பதில்

கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :14 டிசம்பர் 2022, 7:37 pm IST

கடந்த 3 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்தார். அப்போது அவர் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 9 பண்டிட்டுகள் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

2022 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் தலா 4 பண்டிட்டுகளும், 2020ஆம் ஆண்டு ஒருவரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ரூ.2815 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

2019-20ஆம் ஆண்டில் ரூ.1267 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.611 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.936.095 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.