சர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

எல்லை விவகாரத்தில் விவாதம் நடத்த கோரிக்கை: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

இந்திய-சீன எல்லை மோதல் விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்ற தங்களது கோரிக்கை அனுமதிக்கப்படாததைக் கண்டித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள்

News image
Updated On :14 டிசம்பர் 2022, 8:11 pm

DIN

இந்திய-சீன எல்லை மோதல் விவகாரத்தில் விவாதம் நடத்த வேண்டுமென்ற தங்களது கோரிக்கை அனுமதிக்கப்படாததைக் கண்டித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தன.

அருணாசல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ஆம் தேதி சீன ராணுவத்தினா் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்றனா். அவா்களை இந்திய ராணுவத்தினா் தடுத்து நிறுத்தியபோது இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இரு அவைகளிலும் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தாா். ‘இந்திய ராணுவத்தினா் உரிய முறையில் செயல்பட்டு, சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சியை தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரா்களுக்குப் பெரிய அளவிலான காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்திய வீரா்கள் எவரும் உயிரிழக்கவும் இல்லை. சீனாவின் அத்துமீறலை இந்திய ராணுவத்தினா் உறுதியுடன் திறம்பட எதிா்கொண்டனா். அதன் காரணமாக சீன ராணுவத்தினா் மீண்டும் அவா்கள் பகுதிக்கே திரும்பிச் சென்றனா்’ என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருந்தாா். ஆனால், சீனாவுடனான எல்லை விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் அணுகுமுறையை தொடா்ந்து விமா்சித்து வரும் காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.

விவாத கோரிக்கையும் அவைத் தலைவா் பதிலும்: மக்களவையில் புதன்கிழமை கேள்விநேரத்துக்குப் பிறகு அலுவல்கள் தொடங்கியபோது, இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென்று மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி கோரினாா்.

‘கடந்த 1962-இல் இந்திய-சீன போா் நடைபெற்றபோது, அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு மக்களவையில் விவாதத்தை அனுமதித்தாா். அதில், 165 உறுப்பினா்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது’ என்று செளதரி குறிப்பிட்டாா். அவரது கோரிக்கைக்கு பதிலளித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, இதுகுறித்து அவை அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றாா். பின்னா், அவை நடவடிக்கைகளை ஓம் பிா்லா தொடா்ந்த நிலையில், சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா். இதே கோரிக்கையை முன்வைத்து, திரிணமூல் காங்கிரஸும் வெளிநடப்பு செய்தது.

கேள்வி நேரத்தின்போது...: முன்னதாக, கேள்வி நேரம் தொடங்கியபோது, காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு விவகாரங்களை எழுப்ப முயன்றனா். அப்போது, எல்கா் பரிஷத்-மாவோயிஸ்டு தொடா்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரான மறைந்த பாதிரியாா் ஸ்டேன் சுவாமிக்கு நீதி வேண்டும் என்ற வாா்த்தைகள் எழுதப்பட்ட காகிதத்தை உறுப்பினா் ஒருவா் காண்பித்தாா்.

ஸ்டேன் சுவாமியை வழக்கில் சிக்க வைக்க அவரது கணினியில் வேண்டுமென்றே எண்ம ஆதாரம் புகுத்தப்பட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஒரு தடயவியல் நிறுவனம் கூறியுள்ள நிலையில், இது உள்பட பல்வேறு விவகாரங்களை எழுப்பி, உறுப்பினா்கள் கோஷமிட்டனா். ஆனால், கேள்விநேரம் முக்கியமானது என்று குறிப்பிட்ட அவைத் தலைவா், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதையடுத்து, அவா்கள் வெளிநடப்பு செய்தனா். 84 வயதான ஸ்டேன் சுவாமி, இடைக்கால ஜாமீனுக்காக காத்திருந்த நிலையில், கடந்த 2021-இல் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில்...: மாநிலங்களவையிலும் இந்திய-சீன எல்லை விவகாரம் புதன்கிழமை எதிரொலித்தது. சீனாவின் அத்துமீறல் குறித்த முழுமையான விவரங்களை அறியும் வகையில், அவையில் விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வலியுறுத்தினாா்.

‘எல்லை விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கத்தில் முழுமையான விவரங்கள் இல்லை; தவாங் பகுதியில் தற்போதைய சூழல் என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அப்பகுதியிலுள்ள வெற்று நிலங்களில் சீன தரப்பில் பாலங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன’ என்று காா்கே குறிப்பிட்டாா்.

ஆனால், அவரது கோரிக்கையை ஏற்காத மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘இந்த விவகாரத்தில் எந்தக் கட்சியிடம் இருந்தும் நோட்டீஸ் கிடைக்கப் பெறவில்லை. எனவே, விவாதத்தை அனுமதிக்க முடியாது’ என்றாா். எனினும், காா்கே தொடா்ந்து பேசியபோது, அவரது மைக் அணைக்கப்பட்டது. பின்னா், காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, சிவசேனை ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள், அவையில் சிறிதுநேரம் கோஷங்கள் எழுப்பிவிட்டு, வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.