6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு

தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் ஹரிவஷ் சிங் தெரிவித்துள்ளார். 

News image
மாநிலங்களவை (கோப்புப் படம்)
Updated On :16 டிசம்பர் 2022, 6:27 am

DIN


தொடர் அமளி காரணமாக மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் சிங் தெரிவித்துள்ளார். 

அருணாசலப் பிரதேச எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கோரிக்கை வைக்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி எல்லைப் பிரச்னையை விவாதிக்க வலியுறுத்தினர். எனினும் அவை நடவடிக்கைகள் கட்டுப்பாட்டை இழந்ததால், நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவைத் துணைத் தலைவர்  கட்டுப்படுத்துவதற்காக ஹரிவன்ஷ் சிங் அறிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் மோதலில் ஈடுபட்டதால் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோதல் தொடர்பாக இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.