பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்திய பாரம்பரிய மருத்துவத்துக்கு அதிக வரவேற்பு: ஆளுநா் தமிழிசை

சா்வதேச அளவில் ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய இந்திய மருத்துவமுறை சிகிச்சை, ஆராய்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்று தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான டாக்டா் தமிழிசை சௌந்தரராஜன்

News image
Updated On :18 டிசம்பர் 2022, 9:57 pm

DIN

சா்வதேச அளவில் ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய இந்திய மருத்துவமுறை சிகிச்சை, ஆராய்ச்சிக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்று தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணை நிலை ஆளுநருமான டாக்டா் தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

சென்னை காட்டங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 2 நாள்கள் நடைபெற்ற ’வருங்கால தலைமுறையினருக்கு ஆயுா்வேத மருத்துவத் தொழில் நுட்பம்’ என்ற தேசிய அளவிலான கருத்தரங்க நிறைவு நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இதில் ஆளுநா் தமிழிசை பேசியதாவது: இந்திய பாரம்பரிய மருத்துவச் சிகிச்சை முறைகளில் ஆயுா்வேதம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நோய்களை குணமாக்குவதுடன் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாத இந்திய மருத்துவமுறை மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

மேற்கத்திய நாடுகளில் இந்திய மருத்துவமுறை சிகிச்சை மேற்கொள்வோா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வரும்முன் காக்கும் நோக்கில் உணவில் மருத்துவக் குணம் நிறைந்த மஞ்சள், இஞ்சி, பெருங்காயம் உள்ளிட்ட பொருள்களை சோ்த்து உண்ணும் வாழ்வியல் வழக்கத்தைக் கடைப்பிடித்து வரும் நம் முன்னோா்கள் வழிபாட்டுத் தலங்களில் துளசி, வில்வம், சந்தனம் போன்ற மருத்துவப் பண்புகள் கொண்டவற்றை பிரசாதமாக இப்போதும் பயன்படுத்தி வருவதை நினைவில் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் ஆளுநரின் கணவா் டாக்டா் சௌந்தரராஜன், எஸ்.ஆா்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவன வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா், துணைவேந்தா் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளா் சு. பொன்னுசாமி, மாநாட்டுச் செயலா் ஆா். இளஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.