கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீனாவுக்குத் திரும்புவதில் எந்தப் பயனும் இல்லை: தலாய் லாமா

இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்.

News image
Updated On :19 டிசம்பர் 2022, 7:44 am

DIN

இந்தியாவில் இருக்கவே விரும்புகிறேன், சீனாவுக்குத் திரும்புவதில் எந்த பயனும் இல்லை என்று திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார். 

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய - சீனப்படை மோதல் நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. 

இந்நிலையில் இதுகுறித்து திபெத்திய பெளத்த மதத் தலைவர் தலாய் லாமா, '

தற்போது நிலைமை மேம்பாட்டு வருகிறது. சீனாவுக்கு வளைந்துகொடுக்கும் தன்மை உண்டு. ஆனால் நான் சீனாவுக்குத் திரும்புவதில் அர்த்தமில்லை. நான் இந்தியாவை விரும்புகிறேன். அதுதான் என்இடம். காங்க்ரா - நேருவின் விருப்பம். இது எனது நிரந்தர குடியிருப்பு' என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.