நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு விருந்து: 18 வகை தினை உணவுகள்!
சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மதிய உணவாக தினை உணவுகள் வழங்கப்படவுள்ளன.
படம்: ஏஎன்ஐ
படம்: ஏஎன்ஐ
சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று மதிய உணவாக தினை உணவுகள் வழங்கப்படவுள்ளன.
2023-ஐ சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று மதிய உணவை வழங்குகிறார்.
இந்த விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிலையில், மதிய உணவு வகைகள் அனைத்தும் தினை வகைகளை கொண்டு சமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து பிரபல சமையல் கலைஞர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
மதிய உணவாக ராகி தோசை, ராகி ரொட்டி, தினை தயிர் சாதம், ராகி அல்வா, தினை வகைகளாலான கேக், குளிர்பானங்கள் என 18 வகை உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, சர்வதேச தினை ஆண்டை கொண்டாடுவது குறித்தும், தினை குறித்த பிரசாரத்தை மேற்கொள்ளவும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதாகவும், இந்திய அரசின் கடிதத்தை ஏற்று, சர்வதேச தினை ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...