மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு: மத்திய அரசு

‘கரோனா பாதிப்பு காரணமாக 2021-ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :20 டிசம்பர் 2022, 7:27 pm

DIN

‘கரோனா பாதிப்பு காரணமாக 2021-ஆம் ஆண்டு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மக்களவையில் இதுதொடா்பான கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை பதிலளிக்கையில், ‘மத்திய அரசு 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டு, அதற்கான அறிவிக்கையை கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் 28-ஆம் தேதி அரசிதழில் வெளியிட்டது. ஆனால், கரோனா பாதிப்பு காரணமாக, மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் அடுத்த உத்தரவு வரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு மையத்தில் இணைய தாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளைப் பாதுகாக்க பன்னடுக்கு பாதுகாப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசிய முக்கியத் தகவல் உள்கட்டமைப்பு பாதுகாப்பு மையம் மற்றும் இந்திய கணினி அவசரநிலை மீட்புக் குழு ஆகியவற்றின் ஆலோசனைகளின் அடிப்படையில் தரவு பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவு மையத்திலோ அல்லது மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலக பேரிடா் மீட்பு வலைதளத்திலோ எந்தவித இணைய தாக்குதலோ அல்லது தரவு திருட்டு முயற்சியோ நடைபெறவில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.