தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இந்தியாவில் 4 பேருக்கு, சீனாவில் பரவும் புதிய வகை கரோனா!

சீனாவில் பரவி வரும் ஒமைக்ரான் திரிபு வகை கரோனா இந்தியாவில் 4 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :21 டிசம்பர் 2022, 7:39 pm IST

சீனாவில் பரவி வரும் ஒமைக்ரான் திரிபு வகை கரோனா இந்தியாவில் 4 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

குஜராத்தில் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற இரண்டு திரிபு வகை கரோனா இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கண்டறியப்பட்ட நிலையில், அவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோன்று ஒடிசாவிலும் ஒருவருக்கு ஒமைக்ரான் திரிபு வகை கரோனா கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவில் கரோனா கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படவில்லை. 

இதனிடையே குஜராத்தில் ஒமைக்ரான் திரிபு வகை கண்டறியப்பட்ட இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். முதல் நபருக்கு ஜூலை மாதத்தில் தொற்று கண்டறியப்பட்டது. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு மாதிரிகளை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச விமானங்களில் முகக்கவசம் அணியவும் மத்திய அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.