தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

சீனத்தை அச்சுறுத்தும் ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் பரவல்

சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

சீனத்தை அச்சுறுத்தும் ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் பரவல்

Updated On :21 டிசம்பர் 2022, 6:15 pm IST

புது தில்லி: சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் கரோனா பாதிப்பு புதிதாக அதிகரித்துவரக் காரணமான ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா உள்பட பல நாடுகளில் தற்போது அதிகரித்து வரும் ஒமைக்ரான் வகை பிஎஃப்.7 வகையிலான திரிபு வைரஸ் இந்தியாவிலும் பரவியிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவில் கடந்த நவம்பர் மாதம் முதல் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தி நடத்தியிருந்தது.

இந்த நிலையில், கரோனா அதிகம் பரவி வரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு, விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யும் நடைமுறை மீண்டும் தொடங்கியிருக்கிறது.

இந்த நிலையில், பிஎஃப.7 வகையான ஒமைக்ரான் திரிபு குஜராத்தில் 2 பேருக்கும் ஒரிசாவில் ஒருவருக்கும் பாதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.