கடும் பனிப்பொழிவு: பஞ்சாபில் பள்ளி நேரம் மாற்றம்!

கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையடுத்து பஞ்சாபில் பள்ளி நேரத்தை மாற்றி முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 
முதல்வர் பகவந்த் மான்
முதல்வர் பகவந்த் மான்

கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதையடுத்து பஞ்சாபில் பள்ளி நேரத்தை மாற்றி முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். 

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

தில்லி, ஹிமாசல், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் ஆகிய 6 மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. ராஜஸ்தான், பிகார், மேற்கு வங்காளம், சிக்கிம் மாநிலங்களிலும் அடுத்த 2 நாள்களுக்கு அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பஞ்சாபில் பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 21 முதல் ஜனவரி 21 வரை மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் காலை 8 மணிக்குப் பதிலாக 10 மணிக்குத் தொடங்கும் என்றும் பள்ளி முடியும் நேரத்தில் மாற்றமில்லை என்றும் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.

பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக பஞ்சாபில் பள்ளிகள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com