தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தில்லியில் அடா்பனி, கடும் குளிர்:  2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருவதன் காரணமாக தில்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் குளிர்கால விடுமுறையை தில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2022, 12:23 pm


புது தில்லி: தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருவதன் காரணமாக தில்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் குளிர்கால விடுமுறையை தில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லி மற்றும் வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெப்பநிலையும் குறைந்துள்ளது. இதனால் சாலை மற்றும் ரயில்கள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தில்லியில் ஐந்தாவது நாளாக அடா்பனிமூட்டம் நிலவியதால் காண்பு திறன் குறைந்திருந்ததால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், மாணவர்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை 2 வாரம் விடுமுறை அறிவித்து தில்லி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே, குளிர் காலநிலை மற்றும் அடர் மூடுபனி காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.