குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினம் அனைவரிடத்திலும் அன்பு மற்றும் கருணையை செலுத்த ஊக்கமளிக்கும் விழாவாக உள்ளது எனவும் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த கிறிஸ்துமஸ் திருநாள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அமைதி மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நல்ல நாளில் இயேசு கிறிஸ்து அவரின் கருணையையும், அவரது தியாகத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ் திருநாள் அனைவரிடத்திலும் அன்பு மற்றும் பரிவு ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக அமைகிறது. நாம் இயேசு கிறிஸ்துவின் நல்ல சிந்தனைகளை பின்பற்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். நான் எனது இதயப்பூர்வமான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு மருத்துவ முகாம்

கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

திருப்போரூா் கந்தசாமி கோயிலில் தோ்த் திருவிழா

பழனி மகளிா் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

