மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை: நிதிஷ் குமார்

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிப்பதில் தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 டிசம்பர் 2022, 1:43 pm

DIN

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிப்பதில் தனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். 

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது: பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை. பாஜகவை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கத் தயாராக உள்ளேன். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியை 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதில் எனக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை என்றார்.

முன்னதாக, வரும் மக்களவைத் தோ்தலில் ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளின் முகமாகவும் ஒருமித்த பிரதமா் வேட்பாளராகவும் ராகுல் காந்தி திகழ்வாா் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல் நாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.