ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மத்திய பட்ஜெட்: 75 மாவட்டங்களில் இ-பேங்கிங்; வங்கிகளுடன் தபால் நிலையங்கள் இணைப்பு

நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இ-பேங்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2022, 6:26 am

DIN

நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இ-பேங்கிங் வசதி ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தார். 

2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அப்போது உரையாற்றிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் புதிதாக இ-பேங்கிங் வசதி ஏற்படுத்தப்படும். எண்ம(டிஜிட்டல்) பணபரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் பொருட்டு எண்ம பணபரிவர்த்தனை மையங்கள் ஏற்படுத்தப்படும்

நாட்டில் அனைத்துத் துறைகளும் மின்னணுமயமாக்கப்படும். வங்கி சேவையுடன் தபால்துறை சேவைகளும் இணைக்கப்படும். 

நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலக வங்கிகள் இணையம் மூலம் இணைக்கப்படும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.