டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சிறார்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி: மாநில அரசுகளுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்

சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில செயலாளர்களுக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

News image
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் (கோப்புப்படம்)
Updated On :2 பிப்ரவரி 2022, 9:19 am

DIN

சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவு படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் மாநில செயலாளர்களுக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் பூஷண் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

உலகளவில் அதிகபட்சமாக இந்தியா முழுவதும் 15 வயதுக்கு மேற்பட்ட 166.68 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 4.66 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 63 சதவீத சிறார்களுக்கு ஒரே மாதத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் தவணை செலுத்திய 28 நாள்களில் இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள் ஆவர். ஜனவரி 3ஆம் தேதி முதல் தவணை செலுத்தியவர்கள் ஜனவரி 31ஆம் தேதி இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள்.

எனவே, கோவின் தளத்தில் உள்ள தரவுகளை ஆராய்ந்து இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தவணை செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.