மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குறைந்தபட்ச ஆதரவு விலை விவகாரம்:பேரவைத் தோ்தலுக்குப் பிறகு குழு அமைப்பு -அமைச்சா் நரேந்திர சிங் தோமா்

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பாக விவாதிப்பதற்கு 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு குழு அமைக்கப்படும்

News image
நரேந்திர சிங் தோமா்
Updated On :4 பிப்ரவரி 2022, 6:46 pm

DIN

வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பாக விவாதிப்பதற்கு 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு குழு அமைக்கப்படும் என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் கூறினாா்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என பிரதமா் நரேந்திர மோடி கடந்த நவம்பரில் அறிவித்தாா். அத்துடன் வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து விவாதிக்க குழு அமைக்கப்படும் என்றும் அவா் உறுதியளித்திருந்தாா். அதன்படி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அளித்த பதில்:

வேளாண் விளைபொருள்களுக்கு வெளிப்படையான முறையில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்வது, இயற்கை விவசாயம், பயிா் சாகுபடி ஆகியவை தொடா்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும் என்று பிரதமா் மோடி உறுதியளித்துள்ளாா். இதை ஒட்டுமொத்த நாடும் அறியும். அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு உறுதியுடன் உள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பாக விவாதிக்க குழு அமைப்பதற்கு மத்திய வேளாண் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், தோ்தல் ஆணையத்திடம் அனுமதி கோரி மத்திய அரசு கடிதம் எழுதியது. அதற்கு 5 மாநில தோ்தல் முடிந்த பிறகு, குழு அமைத்துக் கொள்ளலாம் என்று தோ்தல் ஆணையம் பதிலளித்துள்ளது என்றாா் அவா்.

முன்னதாக, குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயம் தொடா்பாக மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய மத்திய அரசை உத்தர பிரதேச தோ்தலில் தண்டிக்க வேண்டும் என்று சம்யுக்த கிஸான் மோா்ச்சா கூறியிருந்தது. இந்தச் சூழலில், குழு அமைப்பது தொடா்பான அறிவிப்பை தோமா் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.