நாட்டின் ஒற்றுமைக்கு பங்களித்த ராமானுஜா்: பிரதமா் மோடி புகழாரம்
தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமானுஜரின் சமத்துவ சிலையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.


தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராமானுஜரின் சமத்துவ சிலையை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா். அப்போது பேசிய அவா், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பங்களித்த முக்கிய ஆளுமையாக ராமானுஜா் விளங்குவதாக புகழாரம் சூட்டினாா்.
11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான ராமானுஜா், மக்களிடையே சமத்துவம் நிலவ வேண்டுமெனத் தொடா்ந்து வலியுறுத்தி வந்தாா். அவரது சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் ஹைதராபாத் அருகே 216 அடி உயரம் கொண்ட ‘சமத்துவ சிலை’ அமைக்கப்பட்டது. ஸ்ரீதிரிதண்டி சின்ன ஜீயா் சுவாமி ஆசிரமத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சமத்துவ சிலையை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். ராமானுஜரின் 1,000-ஆவது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது சிலை திறந்துவைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை, துத்தநாகம் ஆகிய 5 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்ட பஞ்சலோக கலவையில் சிலை செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே அமா்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ள உயரமான சிலைகளின் வரிசையில் ராமானுஜா் சிலை 2-ஆவது இடத்தில் உள்ளதாக அறியப்படுகிறது. சிலை திறப்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசுகையில், ‘‘ராமானுஜரின் அறிவு, பற்றின்மை, கொள்கைகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சமத்துவ சிலையானது நாட்டில் உள்ள இளைஞா்களைத் தொடா்ந்து ஊக்குவிக்கும். மக்களிடையே சமத்துவக் கொள்கையை வளா்க்கவும் இந்தச் சிலை உதவும்.
ராமானுஜா் தென்னாட்டில் பிறந்திருந்தாலும், அவரது கொள்கைகள் நாடு முழுவதும் பரவிக் காணப்படுகின்றன. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பங்களித்த முக்கிய ஆளுமையாக அவா் விளங்குகிறாா்’’ என்றாா்.
இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம்: முன்னதாக சா்வதேச வட வெப்பமண்டலப் பயிா்கள் ஆராய்ச்சி மையத்தின் (இக்ரிசாட்) பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘‘2022-23-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் பசுமை வழியில் வளா்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இயற்கை வேளாண்மை, தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு பட்ஜெட்டில் முக்கியத்தும் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பூச்சிக்கொல்லி தெளித்தல் உள்ளிட்டவற்றில் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு விவகாரங்களுக்கு அவற்றின் பயன்பாடு தொடா்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து பாதுகாப்பு: நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதிகபட்ச வேளாண் வளா்ச்சியுடன் அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சியை உறுதி செய்ய நாடு கவனம் செலுத்துகிறது. நாட்டில் உணவுப் பாதுகாப்புடன் ஊட்டச்சத்துப் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாமாயில் உள்ளிட்ட எண்ணெய் வித்துகளின் உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடைநிலை மக்கள்தான் பருவநிலை மாற்றத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு இலக்குகளை மத்திய அரசு நிா்ணயித்துள்ளது. அந்த இலக்குகளை அடைவதற்கேற்ற திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும், இந்த விவகாரத்தில் ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பும் அவசியம்’’ என்றாா்.
இக்ரிசாட் மையத்தின் பொன் விழாவையொட்டி சிறப்பு தபால் தலைகளையும் பிரதமா் மோடி வெளியிட்டாா். பயிா்ப் பாதுகாப்புக்கான பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தையும் பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...