மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அசாமில் பிப். 15 முதல் ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு

அசாம் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதவளர்  ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2022, 6:03 am

அசாம் மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதவளர்  ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். 

நாட்டில் ஒமைக்ரான் பரவல் குறைந்து வருவதனையடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து பிப்ரவரி 15 முதல் ஊரடங்கு வாபஸ் பெறப்படுபடுவதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். 

மேலும், பிப். 15 முதல் கரோனா நடவடிக்கைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படுவதாகக் கூறிய அவர், 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 

மாநிலத்தில் உள்ள மற்ற நகராட்சி வாரியத் தேர்தல்களுடன், குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் மற்றும் கர்பி அங்லாங் தன்னாட்சி கவுன்சில் தேர்தல்கள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.