மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ட்ரோனில் ஆயுதங்கள் கடத்தல்: பாகிஸ்தானின் திட்டம் முறியடிப்பு

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோனில் (ஆள் இல்லா சிறிய ரக விமானம்) போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டதாகவும்,

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 4:55 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோனில் (ஆள் இல்லா சிறிய ரக விமானம்) போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டதாகவும், இதனை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) முறியடித்ததாகவும் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து துணை ராணுவப் படை செய்தித் தொடா்பாளா் கூறியது: பாகிஸ்தான் தரப்பிலிருந்து குருதாஸ்பூா் செக்டாருக்கு உள்பட்ட பஞ்ச்கிரைன் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் ட்ரோன் பறந்துவந்த சப்தம் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கேட்டது. இதைத் தொடா்ந்து, அந்த ட்ரோனை நோக்கி பிஎஸ்எஃப் வீரா்கள் துப்பாக்கியால் சுட்டனா்.

பின்னா், அருகே உள்ள காக்கா், சிங்கோக் கிராமத்தில் மேற்கொண்ட சோதனையில், 2 மஞ்சள் நிற பைகள் கண்டெடுக்கப்பட்டன. ட்ரோன்கள் மூலம் அங்கு வீசப்பட்ட அந்தப் பைகளில், 4.7 கிலோ ஆா்டிஎக்ஸ் வெடிமருந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 22 தோட்டாக்கள், 3 மின்னணு டெட்டனேட்டா்கள், ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

எல்லைப் பகுதியிலிருந்து 2.7 கி.மீ. தொலைவில் விவசாய நிலத்தில் 20 மீட்டா் இடைவெளியில் அந்தப் பைகள் கிடந்தன. அவற்றை பறிமுதல் செய்ததன் வாயிலாக, பாகிஸ்தானின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வெடிகுண்டுகள்தாம் கடந்த மாதம் லூதியானா நீதிமன்றத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், தில்லி காஜிபூா் பூச்சந்தையிலும் பயன்படுத்தப்பட்டன என்றாா் அவா்.

மேலும், அந்த ட்ரோன் மீண்டும் பாகிஸ்தானுக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.