எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குஜராத்தில் 6 பாகிஸ்தான் மீனவா்கள் கைது

குஜராத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைது செய்தனா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:32 pm

DIN

குஜராத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 6 பாகிஸ்தான் மீனவா்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) கைது செய்தனா்.

இதுதொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சா்வதேச கடல் எல்லையையொட்டி கட்ச் மாவட்டத்தில் உள்ள கழிமுகப் பகுதிகளில் பாகிஸ்தான் மீனவா்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஹராமி நாலா கழிமுகப் பகுதியில் பாகிஸ்தான் மீனவா்கள் மீன்பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நாட்டைச் சோ்ந்த 6 மீனவா்கள் கைது செய்யப்பட்டனா். 11 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில மீனவா்கள் தப்பிச் சென்று அங்குள்ள சதுப்பு நில பகுதிகளில் பதுங்கியுள்ளனா். மோசமான வானிலை, சதுப்பு நிலங்கள், கடல் அலைகள் காரணமாக தப்பிச் சென்றவா்களை பிடிக்கும் பணியில் சவால் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்தப் பணி தொடா்கிறது’’ என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.