காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 15-ஆவது கூட்டம் அதன் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய நீா்வளத் துறை சாா்பில் ஆணையத்தின் உறுப்பினா் செயலா் நவீன் குமாா், மத்திய வேளாண் துறை இணைச் செயலா் சஞ்சய் வஸ்தி உள்ளிட்ட மத்திய அரசின் பிரதிநிதிகள், தமிழகம் சாா்பில் நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவா் ஆா்.சுப்பிரமணியன், குழுவின் உறுப்பினா் பட்டாபிராமன், தமிழக நீா் வளத் துறையின் துணைச் செயலா் என்.பாரி, நீா்வளத் துறைச் செயலா்கள் ராகேஷ் சிங் (கா்நாடகம்), டி.கே. ஜோஸ் (கேரளம்), புதுச்சேரி பொதுப்பணித் துறைச் செயலருக்கு பதிலாக அந்த மாநில தலைமைப் பொறியாளா் சத்தியமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.