தூத்துக்குடி மாவட்டத்தில் பெற்ற மகளையும், மகனையும் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி (34), திருமணம் முடிந்து 12 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனா். இவா், தனது மகளையும், மகனையும் பாலியன் வன்கொடுமை செய்துள்ளாா். இதையறிந்த இவரது மனைவி, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இளைஞரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி பிரீத்தா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் குற்றம் சாட்டப்பட்ட சின்னத்தம்பிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவனுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் ஜூடி ஏஞ்சலோ ஆஜரானாா்.
தொடர்புடையது

போக்சோ வழக்கில் பெண்ணுக்கு 95 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


