இந்தியாவில் 32 ஆயிரமாகக் குறைந்த கரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,113 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு தரவுகள் குறித்த செய்திக் குறிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 24 சதவிகிதம் ஆகும்.
ஒரேநாளில் 346 பேர் கரோனா தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி 5,09,011 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 91,930 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,16,77,641 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 11.66 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில்,
இந்தியாவில் மொத்தம் 172.95 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...