பாகிஸ்தானில் ஒருநாள் பாதிப்பு 2,662 ஆகப் பதிவு
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,662 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக என்.சி.ஓ.சி தரவு தெரிவித்துள்ளது.


பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,662 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக என்.சி.ஓ.சி தரவு தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட தகவலின்படி,
ஒரேநாளில் 29 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ள நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 29,801 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் 1,566 பேர் உள்ளனர்.
இஸ்லாமாபாத்தில் 133,112 பேருக்கும், பலுசிஸ்தானில் 35,096 பேருக்கும், சிந்துவில் 558,826 பேருக்கும், பஞ்சாபில் 495,430 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் கைபர் பக்துன்க்வாவில் இன்றுவரை 2,10,726 கரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.
தற்போது கரோனாவின் ஐந்தாவது அலைக்கு மத்தியில் உள்ள பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...