பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தாரில் நடைபெறவுள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இதையடுத்து, பஞ்சாப் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஜனவரி 5ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் வாகனம் செல்லும் சாலையில் போரட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டிருந்ததால் 20நிமிடங்கள் சாலையில் காத்திருந்து மீண்டும் தில்லிக்கு மோடி திரும்பினார்.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

எந்த இடத்திலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது : மும்பை உயா்நீதிமன்றம்
இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்

அடுத்த இரு நாள்களுக்கு நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

