டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

'அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்' - அமித் ஷா பேச்சு

உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:24 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.10 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 

இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேச மாநிலம் திபியாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா, 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களுக்குப் பிறகு மாநிலத்தில் இருந்து சமாஜ்வாதி கட்சி அழிக்கப்பட்டுவிட்டது. 

ஹோலி பண்டிகை மார்ச் 18 ஆம் தேதி வருகிறது. மார்ச் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் பாஜக அரசை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.  இலவச கேஸ் சிலிண்டர்கள் மார்ச் 18 ஆம் தேதி உங்கள் வீட்டிற்கு வரும். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. 

உத்தரபிரதேசத்தில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பாஜகவின் பெரும்பான்மை இந்த முறை மேலும் அதிகரிக்க வேண்டும்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.