குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கலாசாரத்திற்கு ஏற்ப ஊர்கள், இடங்களின் பெயர்கள் மாற்றம்: அசாம் முதல்வர் அறிவிப்பு

வடகிழக்கு மாநிலத்தின் கலாசாரம், மரபுகளுக்கு ஏற்ப மாநிலத்தில் பல இடங்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா புதன்கிழமை அறிவித்தார்.

News image
 முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா
Updated On :16 பிப்ரவரி 2022, 6:33 am

DIN

வடகிழக்கு மாநிலத்தின் கலாசாரம், மரபுகளுக்கு ஏற்ப மாநிலத்தில் நகரங்கள், ஊர்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா புதன்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அவர்  தனது ட்விட்டர் பதிவில், 'ஒரு பெயரில் நிறைய இருக்கிறது. ஒரு நகரம், கிராமத்தின் பெயர் அதன் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நாகரிகத்தை பிரதிபலிக்க வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும், அசாமில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மக்களிடமும் பெயர் பரிந்துரைகள் கேட்கப்படுகிறது. இதற்காக தனியே ஒரு இணையதளமும் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக செவ்வாய்க்கிழமை குவஹாத்தியில் மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், 'கலபார் உள்ளிட்ட சில இடங்கள், மாநிலம் முழுவதும் உள்ள பிற நகரங்கள் மற்றும் கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படும். ஏனெனில் சில பெயர்கள் மக்கள் உச்சரிக்க வசதியாக இல்லை. சில சமூகங்களை இழிவுபடுத்துவனவாக உள்ளன. அவை மாற்றப்பட வேண்டும்' என்று கூறினார். 

கடந்த ஆண்டு செப்டம்பரில், அசாமில் உள்ள ராஜீவ் காந்தி தேசியப் பூங்காவின் பெயரை மாற்றக்கோரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து, 'ஒராங் தேசியப் பூங்கா' என்று பெயர் மாற்றம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.