2வது நாளாக ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 
2வது நாளாக ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடா்பாக பேரிடா் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 

கடந்த இரண்டு நாட்களில் பள்ளத்தாக்கில் உணரப்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

வியாழன் அதிகாலை 3.02 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.5 ஆகப் பதிவானது. இது ஜம்மு-காஷ்மீரின் தோடா பகுதியில் 5 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரிக்டா் அளவுகோலில் 3.2 ஆக நிலநடுக்கம் பதிவானது. 

லேசான நிலஅதிா்வை மக்கள் உணர்ந்தனர். வீடுகளில் இருந்த பொருள்களிலும் அதிர்வை உணர முடிந்ததால் சிலா் தெரிவித்தனர். சிலா் வீடுகளை விட்டு வெளியேறி வெட்டவெளிப் பகுதிகளில் தஞ்சமடைந்தனா். எனினும், இதனால் யாருக்கும் காயமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com