ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பயங்கரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள்: அதிர்ச்சியளிக்கும் உண்மை

பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், ஆப்கனில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்றவை என்பது தெரிய வந்துள்ளது.

News image

பயங்கரவாதிகளிடம் அமெரிக்க ஆயுதங்கள்: அதிர்ச்சியளிக்கும் உண்மை

Updated On :19 பிப்ரவரி 2022, 12:07 pm


புது தில்லி: இந்திய எல்லைக்குள் அத்துமீறு ஊடுருவ முயன்ற பங்கரவாதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அவர் கொல்லப்பட்டார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், ஆப்கானில் அமெரிக்கப் படைகள் விட்டுச் சென்றவை என்பது தெரிய வந்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் அஜய் சந்த்புரியா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்று, கொல்லப்பட்ட பயங்கரவாதியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வழக்கமாக பயங்கரவாதிகளிடம் காணப்படும் ஆயுதங்களைப் போல இல்லை. இவை, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினரால் விட்டுச் செல்லப்பட்டவை. எனவே, தற்போதைய கணிப்பின்படி, பயங்கரவாதிகள் மட்டுமல்ல, காஷ்மீருக்கு வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களும் வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், ஆப்கனில் பாதுகாப்புப் பணிக்காக வந்த அமெரிக்கப் படைகள், அந்நாட்டை விட்டு வெளியேறும் போது விட்டுச் சென்ற ஏராளமான சக்தி வாய்ந்த ஆயுதங்களும், தொழில்நுட்பத்தில் சிறந்த கண்காணிப்புக் கருவிகளும், பாகிஸ்தான் வழியாக காஷ்மீருக்கு கடத்தப்படுகிறதோ என்ற அச்சமும் எழுந்துள்ளது என்று கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.