ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தோண்டி எடுக்கப்பட்ட பெண்ணின் உடல்...வரதட்சிணை புகாரால் வழக்கில் திருப்பம் 

வெள்ளிக்கிழமை பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட பிறகு, உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது.

News image
கோப்புப்படம்
Updated On :19 பிப்ரவரி 2022, 11:40 am

DIN

உத்தரப் பிரதேசம் முசாபர்நகரில் புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. வரதட்சிணை புகார் எழுந்ததையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அலுவலர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அலுவலர், "மகியாலி கிராமத்தில் வசித்துவரும் அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த குலிஸ்தா பேகம் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், வரதட்சிணையாக 2 லட்சம் ரூபாய் மற்றும் மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளனர். இதையடுத்து, அவரது மாமியாரால் அடித்துக் கொல்லப்பட்டார். பிப்ரவரி 14ஆம் தேதி அவரது உடல் புதைக்கப்பட்டது. உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

இதையடுத்து, அவரது கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். 

கடந்த 2015ஆம் ஆண்டு, குலிஸ்டா பேகம் மிர் ஹாசனை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.