பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு! அலறும் வாகன ஓட்டிகள்..!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!
/

கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோவாவில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 11:10 am IST

கோவாவில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கோவாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று(பிப்.1) முதல் செயல்படுகிறது. 

கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன்கருதி கடந்த சில மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுற்றறிக்கையின்படி,

மாணவர்களுக்கு பள்ளி சீருடை கட்டாயமில்லை என்றும், ஆரம்ப நாட்களில் மாணவர்களுக்கு பள்ளி வருவதற்கான நேரச் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.