கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோவாவில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 
கோவாவில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

கோவாவில் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. 

கோவாவில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இன்று(பிப்.1) முதல் செயல்படுகிறது. 

கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன்கருதி கடந்த சில மாதங்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் நோய்த் தொற்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் இன்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுற்றறிக்கையின்படி,

மாணவர்களுக்கு பள்ளி சீருடை கட்டாயமில்லை என்றும், ஆரம்ப நாட்களில் மாணவர்களுக்கு பள்ளி வருவதற்கான நேரச் சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com