ஆப்கனுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியது இந்தியா

ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.
ஆப்கனுக்கு 50,000 மெட்ரிக் டன் கோதுமையை அனுப்பியது இந்தியா
Published on
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடுமையான பணவீக்கமும், வேலையின்மை மற்றும் உணவுப் பஞ்சமும் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, அன்றாட உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய அரசு சார்பில் ஆப்கன் மக்களுக்கு 50,000 மெட்ரிக் டன் எடையுள்ள கோதுமையை லாரிகள் மூலம் பாகிஸ்தான் வழியாக வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கொடியசைத்து  அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com