சர்வதேச பயணிகள் விமான சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதியுடன் விமானங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. 

விமானப் போக்குவரத்துக்கான தடை இன்றுடன்(பிப்.28) முடிவடைய உள்ள நிலையில், அடுத்த அறிவிப்பு வரும் வரை சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதேநேரம், மத்திய அரசின் அனுமதியுடன் அங்கீகரிக்கப்பட்ட சில விமான சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com