ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 73 வயதுடையவர் கடந்த டிசம்பர் 31-ம் தேதி உயிரிழந்துள்ளார்.
73 வயதுடையவருக்கு டிசம்பர் 15-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் அவருக்கு இருந்தன. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மரபணு பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது டிசம்பர் 25-ம் தேதி தெரியவந்தது. எனினும், அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பது டிசம்பர் 21 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரண்டு பரிசோதனைகளின் முடிவில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 31-ம் தேதி அவர் உயிரிழந்தார். கரோனாவுக்குப் பிந்தைய பிரச்னைகள் காரணமாக அவர் உயிரிழந்ததாக உதய்பூர் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி தெரிவித்தார்.
இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகிவிட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

ஓடிடியில் வெளியாகிறது மூன்றாம் பிறை!

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


