புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை தொலைபேசியில்

News image
கோப்புப்படம்
Updated On :5 ஜனவரி 2022, 7:10 pm

DIN

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மாலத்தீவு, பூடான் ஆகிய நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதற்காக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆலோசித்தாா்.

இந்தோனேசிய வெளியுறவு அமைச்சா் ரெட்னோ லேஸ்டாரி பிரியன்சாரி மாா்சுடியுடன் மியான்மா் மற்றும் ஆப்கன் விவகாரம் குறித்து கருத்து ப் பரிமாற்றம் செய்ததாகவும், ஜி-20 மாநாட்டில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலேசித்ததாகவும் ட்விட்டரில் ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

இதேபோல் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மேரிஸ் பேனிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததாகவும், 2022-ஆம் ஆண்டு இருநாட்டு நல்லுறவும் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் எனவும் ஜெய்சங்கா் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சா் அப்துல்லா சாஹித், பூடான் வெளியுறவு அமைச்சா் தாண்டி டோா்ஜி ஆகியோருடனும் தொலைபேசியில் பேசியதாக ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.