இத்தாலியிலிருந்து இந்தியா வந்த 125 பயணிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானம் மூலம் இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்த பயணிகளில் 125 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றால் அனைத்து விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ஒரே விமானத்தில் 125 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.