/

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 2,630-ஆக உயர்வு

நாட்டில் புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,630-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 2,630-ஆக உயர்வு
Updated On :6 ஜனவரி 2022, 4:30 am

DIN


நாட்டில் புதிய வகை கரோனாவான ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,630-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டில் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பரவியுள்ளது. 

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 797 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தில்லியில் 465 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதமும் அதிகரித்து வருகிறது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.