மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா முன்னாள் முதல்வருக்கு 'வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து'

கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானே, 50 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்த நிலையில், அவருக்கு வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

News image
கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானே
Updated On :7 ஜனவரி 2022, 6:16 am

DIN

கோவா முன்னாள் முதல்வர் பிரதாப்சிங் ரானேவுக்கு (87) வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் நேற்று அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவர், தற்போது பொரியம் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த சாவந்த் இதுகுறித்து கூறுகையில், "கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முன்னாள் சபாநாயகருமான ரானேவுக்கு, நிரந்தர அமைச்சர் அந்தஸ்து வழங்க அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. 50 ஆண்டு காலமாக, கோவா சட்டப்பேரவையில் உறுப்பினராக உள்ளதால், அவரை கெளரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

50 ஆண்டுகளாக எம்எல்ஏக்களாக பதவி வகிப்பவர்கள், முன்னாள் முதல்வர்கள் அல்லது முன்னாள் சபாநாயகர்களுக்கு, இந்த அந்தஸ்து எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.

கடந்த 1987 முதல் 2007 வரை, பல்வேறு சமயங்களில், ரானே முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். ரானேவுக்கு வாழ்த்து தெரிவித்த அவரது மகனும் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருமான விஸ்வஜீத், "எனது தந்தை பிரதாப்சிங் ராவ்ஜி ரானேவுக்கு வாழ்நாள் அமைச்சர் அந்தஸ்து வழங்கியதற்காக முதல்வருக்கும் ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

முதல்வராகவும், சபாநாயகராகவும், எம்எல்ஏவாகவும் பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகாலமாக பணியாற்றிய அவரை கெளரவிக்க இதைவிட பெரிய வழி இல்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.