ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சிறையில் அதிரடி சோதனை; அச்சத்தில் செல்போனை விழுங்கிய கைதி

"டிடியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது"

News image

திகார் சிறை

Updated On :7 ஜனவரி 2022, 10:49 am

கடந்த ஜனவரி 5ஆம் தேதி, தில்லி திகார் சிறையில் சிறை அலுவலர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, விசாரணை கைதி ஒருவர், தன்னிடம் வைத்திருந்த செல்போனை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறுகையில், "ஜனவரி 5 ஆம் தேதி, சிறை எண்.1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது. சோதனை செய்தவற்காக சென்றபோது, அவர் மொபைல் போனை விழுங்கிவிட்டார்.

அவர் டிடியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. ஆனால், மொபைல் இன்னும் வெளியே எடுக்கப்படவில்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.