சிறையில் அதிரடி சோதனை; அச்சத்தில் செல்போனை விழுங்கிய கைதி

"டிடியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது"
திகார் சிறை
திகார் சிறை
Published on
Updated on
1 min read

கடந்த ஜனவரி 5ஆம் தேதி, தில்லி திகார் சிறையில் சிறை அலுவலர்கள் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, விசாரணை கைதி ஒருவர், தன்னிடம் வைத்திருந்த செல்போனை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காவல்துறை டிஐஜி சந்தீப் கோயல் கூறுகையில், "ஜனவரி 5 ஆம் தேதி, சிறை எண்.1இல் உள்ள கைதி மீது சந்தேகம் ஏற்பட்டது. சோதனை செய்தவற்காக சென்றபோது, அவர் மொபைல் போனை விழுங்கிவிட்டார்.

அவர் டிடியு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. ஆனால், மொபைல் இன்னும் வெளியே எடுக்கப்படவில்லை" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com