நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா

நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2022, 7:07 am

DIN


நாடாளுமன்ற ஊழியர்கள் 400 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: 

"தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, ஜனவரி 6, 7 தேதிகளில் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 400 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான ஊழியர்களுக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை.

கரோனா பரவலைத் தடுக்க நாடாளுமன்றத்துக்கு வருபவர்களுக்கு மேலும் சில பரிசோதனைகள் நடத்தப்படும்."

தில்லியில் சனிக்கிழமை 20,181 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த 8 மாதங்களில் இதுவே அதிகபட்ச பாதிப்பு.

முன்னதாக, அனைத்து ஊழியர்களுக்கு கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொள்ள வேண்டும் என  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.