ஆந்திரத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு: முதல்வர் அறிவிப்பு

நாட்டில் பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திரத்திலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திரத்திலும் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. 

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து, இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

நேற்று ஆந்திரத்தில் ஒரேநாளில் 1,257 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com