பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

காசியின் கால பைரவருக்கு முதல் முறையாக இப்படி ஒரு அலங்காரம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள பாபா கால பைரவர் கோயிலில் அமைந்துள்ள  கால பைரவருக்கு முதல் முறையாக, காவல்துறையின் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

News image

காசியின் கால பைரவருக்கு முதல் முறையாக இப்படி ஒரு அலங்காரம்

Updated On :10 ஜனவரி 2022, 8:41 am

வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள பாபா கால பைரவர் கோயிலில் அமைந்துள்ள  கால பைரவருக்கு முதல் முறையாக, காவல்துறையின் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

காசியின் காவலர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கால பைரவருக்கு, காவல்துறையினர் அணியும் தொப்பி தலையில் அணிவிக்கப்பட்டு, நெஞ்சில் காவலர்களுக்கான பதக்கமும் அணிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கையில், காவல்துறையினர் வைத்திருக்கும் தடியும், மற்றொரு கையில் புகார்களைப் பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்துக் கொண்டு, கால பைரவர் புதிய வடிவில் பக்தர்களுக்கு இன்று அருள்பாலித்தார்.

கால பைரவருக்கு இப்படி ஒரு புதிய அலங்காரம் செய்யப்பட்டிருப்பது குறித்து செய்தி பரவியதும், அதனை தரிசிக்க ஏராளமானோர் கோயிலில் திரண்டனர்.

கால பைரவரே அமர்ந்து அனைவரது புகார்களையும் பதிவு செய்து விட்டால், யாருடையதும் நிராகரிக்கப்படாது என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.