புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

போலந்து, போா்ச்சுகல் வெளியுறவு அமைச்சா்களுடன் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

போலந்து, போா்ச்சுகல் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :11 ஜனவரி 2022, 9:08 pm

DIN

போலந்து, போா்ச்சுகல் நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் செவ்வாய்க்கிழமை பேசினாா்.

இதுதொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், ‘‘இந்தியா-போலந்து இடையிலான உறவு குறித்து போலந்து வெளியுறவு அமைச்சா் ஸிபிக்நியூ ராவுடன் விரிவாகப் பேசினேன். அப்போது இருநாடுகளுக்கு இடையே அரசியல் ரீதியான உறவை மேலும் அதிகரிப்பது, வணிகத்தை விரிவுபடுத்துவது, பிராந்திய அளவிலான ஆலோசனைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என்று இருவரும் தீா்மானித்தோம்.

போா்ச்சுகல் வெளியுறவு அமைச்சா் அகஸ்டோ சான்டோஸ் சில்வாவுடன் கரோனா நோய்த்தொற்று குறித்து பேசினேன். போா்ச்சுகலில் இந்திய-ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் சந்தித்தது, அந்நாட்டுடன் இடம்பெயா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது ஆகியவை கடந்த ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளாகும்’’ என்று தெரிவித்தாா்.

மற்றொரு பதிவில் நெதா்லாந்து துணைப் பிரதமராகவும், வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள வோப்கே ஹோக்ஸ்ட்ராவுக்கு எஸ்.ஜெய்சங்கா் வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.