தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவரை தேடுகிறது காவல்துறை

பிகார் மாநிலம் மதேபுரா பகுதியைச் சேர்ந்த முதியவர் பிராம்டியோ மண்டல், முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவரை தேடுகிறது காவல்துறை
Updated On :12 ஜனவரி 2022, 6:32 am

DIN


மதேபுரா: பிகார் மாநிலம் மதேபுரா பகுதியைச் சேர்ந்த முதியவர் பிராம்டியோ மண்டல், முறைகேடாக 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையை ஏமாற்றியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, காவலர்கள் தன்னை தேடுவதை அறிந்து, தலைமறைவாக இருக்கும் 84 வயது முதியவர், தன்னை காவலர்கள் கண்டுபிடித்து சிறை வைத்தால், தான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து தகவல்கள் தெரிவிப்பது என்னவென்றால், பலரது அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மண்டல், இதுவரை 11 முறை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்து காவலர்கள் அவரது இருப்பிடத்தில் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்த மண்டல், தனது செல்லிடப்பேசியை அணைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். 

தலைமறைவாக இருந்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் தலையிட்டு, தன்னை கைது செய்யாமல் தடுக்குமாறு அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

இது குறித்து அவரது மனைவி நிர்மலா தேவி கூறுகையில், காவலர்கள் தன்னை ஒரு குற்றவாளி போல நடத்தியதாகவும், தனது கணவர் ஏற்கனவே பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்ததகாவும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது, அவருக்கு சில நோய்களிலிருந்து விடுதலை கிடைத்ததால், தொடர்ந்து அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகக் கூறுகிறார்.

ஆனால், மண்டல் போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி பல முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக ஆரம்ப சுகாதார அதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.