இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த 2 சகோதர்கள் 74 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்துக் கொண்டனர்.
1947-ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைவின் போது சித்திக் மற்றும் ஹபிப் ஆகிய இரண்டு சகோதரர்களில் சித்திக் பாகிஸ்தானிலும் அவருடைய அண்ணன் ஹபிப் பஞ்சாபின் கர்தார்பூர் பகுதியிலும் தஞ்சம் அடைந்தனர்.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தானை இணைக்கும் பஞ்சாப்பின் எல்லைப் பகுதிகளில் ஒன்றான கர்தார்பூர் நுழைவுப் பகுதியில் 74 ஆண்டுகள் கழித்து இரு சகோதரர்களும் நேற்று(ஜன.12) சந்தித்துக் கொண்டனர்.
சந்திப்பின்போது ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்ட விடியோ காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறது.