காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

நாட்டில் 15-18 வயதுடைய 3 கோடி பேருக்கு தடுப்பூசி: மன்சுக் மாண்டவியா

இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :13 ஜனவரி 2022, 7:45 am

DIN

இந்தியாவில் 3 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர்  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கடந்த ஜன.3 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

பள்ளிகள், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 3 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மேலும், தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.