தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

'தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதியில்லை'

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 - 18 வயதுக்குரிய மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

News image
'தடுப்பூசி செலுத்தாத மாணவர்களுக்கு பள்ளியில் அனுமதியில்லை'
Updated On :15 ஜனவரி 2022, 7:07 am

DIN


சண்டிகர்: பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 - 18 வயதுக்குரிய மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய அனுமதியில்லை என்று ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் காரணத்தால், பல்வேறு புதிய கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து பெற்றோரும், தங்களது 15 - 18 வயதுடைய பிள்ளைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திவிட வேண்டும். பள்ளிகள் திறக்கப்படும்போது தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.

15 - 18 வயதுடைய சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஹரியாணாவில் மட்டும் சுமார் 15 வயதுடைய சிறார்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்களாவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.